இலங்கைக்கு இன்று வரும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வெயர் நாளை யாழ் வலி- வடக்கு மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இவரின் மூன்று நாள் விஜயத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஏனைய அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இவர்களின் சந்திப்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் செல்லும் அமைச்சர் வடக்கு முதல்வர் உள்ளிட்ட குழுவினரையும் சந்திக்கவுள்ளார். அதனை தொடர்ந்து வலி- வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

0 Comments