
92,000 சனத்தொகையையே கொண்ட நாடான செஷேல்சுக்கு கடந்த வருடம்
மிஹின் லங்கா மூலம் நேரடி விமான சேவையையும் ஆரம்பித்ததோடு ஏழு மாதங்களுக்கு முன்பாக அங்கு இலங்கை வங்கிக் கிளையொன்றையும் ஆரம்பித்து பல்வேறு இரகசிய முதலீடுகளையும் டுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பமும் செய்திருப்பதாகக் கூறப்படும் விவகாரங்கள் தீர ஆராயப்படும் என தகவல் வெளியிட்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அதற்குரிய தகவல் திரட்டும் பணிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார விவகார அமைச்சர் ஹர்ஷ டிசில்வா இது குறித்து சர்வதேச ஒத்துழைப்பையும் நாடவுள்ளதாக முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதது.
0 Comments