இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நரேந்திர மோடியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
மோடியின் இந்த விஜயம் இடம்பெறும் பட்சத்தில், இந்திய பிரதமர் ஒருவர் 1987 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments