கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருள) வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டத்தில் ஊழல், மோசடிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனாலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இருப்பினும், கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கபுர்வமான அபிவிருத்தித் திட்டங்கள் வீண் விரயங்கள் அற்ற முறையில் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

0 Comments