100 நாள் திட்டத்தை அமுல்படுத்த பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று ITN தொலைகாட்சியில் அவர் பங்குபற்றிய நேரடி நிகழ்ச்சியின் தொகுப்பு.
முன்னதாக இது தமக்கு புரியவில்லை எனவும், சில திட்டங்களை அமுல்படுத்த முயற்சித்த போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதீத அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் கூட பாராளுமன்றின் ஒத்துழைப்பு இன்றி சில விடயங்களை செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 127 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் எனவும், பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வது தற்போதைக்கு சிரமமான விடயமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை நடத்தினால் 100 நாள் திட்டத்தை 150 நாட்களில் கூட செய்ய முடியாமல் போய்விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றம் எவ்வாறு அமையும் என்பது பற்றிய ஊகங்களை வெளியிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சுதந்திரக் கட்சியின் முழு ஒத்துழைப்புடன் 100 நாள் திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும், 100 நாள் திட்டத்தை வீணடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் பாரியளவில் வன்முறைகள் வெடித்திருக்க வாய்ப்பு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, சபாநாயகர் இல்லத்தில் வைத்து பத்து நிமிடங்கள் சந்தித்து பேசியதாகவும், கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள விருப்பமா என மஹிந்த கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் அதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும், தமது நிலைமை என்ன என அவர் வினவியதாகவும், அதற்கு மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் அதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும், தமது நிலைமை என்ன என அவர் வினவியதாகவும், அதற்கு மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தேனீர் அருந்தியதாகவும், அப்பம் சாப்பிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் பின்னர் கட்சி உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துமாறு மஹிந்த தம்மிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
47 ஆண்டுகள் ஐக்கியதேசியக் கட்சியினர் தம்மை துன்புறுத்தியதாகவும் அவ்வாறான ஓர் நிலையில் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கும் நோக்கிலேயே இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
100 நாட்களுக்கு மட்டும் தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருக்காது எனவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரையிலேனும் ஆட்சி நடத்தினால் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படும் போது தோ்தல் நடத்தப்பட்டதா என்பது குறித்து தெரியாது எனவும், மிகவும் அமைதியான முறையில் நடத்தப்படும் எனவும், வன்முறைகள் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஆட்சி நடத்தவில்லை எனவும், தேசிய அரசாங்க முறைமை ஒன்று பின்பற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படும் போது தோ்தல் நடத்தப்பட்டதா என்பது குறித்து தெரியாது எனவும், மிகவும் அமைதியான முறையில் நடத்தப்படும் எனவும், வன்முறைகள் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஆட்சி நடத்தவில்லை எனவும், தேசிய அரசாங்க முறைமை ஒன்று பின்பற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் எந்த மேடையில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பின்னர் சிந்திப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரும், சுதந்திரக் கட்சியினரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தை வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் மட்டும் நிராகரிக்கவில்லை எனவும், பாரியளவில் சிங்கள பௌத்த மக்களும் தமக்கு வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை மாற்றியமைக்க சிங்கள பௌத்தர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு 2010ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதிக்கு காணப்பட்ட வாக்கு வங்கி இந்த தடவை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு உத்தியோகபூர்வ விமானங்கள் எதுவும் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தம்மை அதி மேதகு, கௌரமிக்க, சேர் என்றெல்லாம் அழைக்க வேண்டியதில்லை எனவும், தமது மனைவியை பாரியார் என அழைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுமக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதீதமான அதிகாரங்கள் தேவையில்லை எனவும் அந்த அதிகாரங்கள் விரைவில் ரத்து செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் கடைசி 1 1/2 மாத காலப்பகுதியில் ஜனாதிபதி மாளிகைகளின் உணவு, குடிபான செலவு மட்டும் 157 மில்லியன்,
எனது நிகழ்வுகளுக்கு மாணவர்களை வைத்து ஊர்வலம் நடத்துதல், மற்றும் பாதையோரங்களில் வரவேற்புக்காக அவர்களை நிறுத்தி வைத்தல், சுதந்திர தினம் என்ற பெயரில் மாணவர்களை வரவேற்பு நிகழ்வில் பங்குபற்ற வைத்தல் என்பது வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக தொலைக்காட்சி நேரடி செவ்வியொன்றில் பங்கேற்று ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

0 Comments