இலங்கையில் இடம்பெற்ற பாரிய வெட் வரி (VAT) ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகள் இருவரான மொஹம்மட் முர்சி ரசீட் மற்றும் மொஹம்மட் நஸ்மி நாகூர் அடுமை ஆகியோருக்கு ஒருவருக்கு 280 வருடங்களும் மற்றையவருக்கு 100 வருடங்களும் சிறைத்தண்டனையை ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியிருந்தது. மலேசியாவில் கைது செய்யப்பட்டு இப்போது குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இவா்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.
இதேநேரம், இம்மோசடியின் பிரதான சூத்திரதாரியான, தற்போது டுபாயில் வசிக்கும் குதுப்தீனைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

0 Comments