நுகேகொடை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மஹிந்தவுக்கு ஆதரவு தொிவிக்கும் கூட்டம் தொடா்பாக அஸாத்சாலி விடுத்த சவால் பெரும் சா்ச்சையைக் கிளப்பி வருகிறது.
நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஐயாயிரம் பேரை அழைத்து வந்தால் அரசியலிலிருந்து விலகுவதாக அஸாத் சாலி சவால் விட்டிருந்தாா்.
இந்த சவாலை சிங்கள இனவாதிகள் மட்டுமன்றி முஸ்லிம் மக்கள் கூட விமா்சித்து வந்தனா். அஸாத்சாலியின் இந்த செயற்பாடு பொதுபலசேனாவின் செயற்பாட்டுக்கும், சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டுக்கும் ஊக்கம் வழங்கும் ஒன்றாக மாறும் என்று முஸ்லிம்களும் கருதினா்.
நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஐயாயிரம் பேரை அழைத்து வந்தால் அரசியலிலிருந்து விலகுவதாக அஸாத் சாலி சவால் விட்டிருந்தாா்.
இந்த சவாலை சிங்கள இனவாதிகள் மட்டுமன்றி முஸ்லிம் மக்கள் கூட விமா்சித்து வந்தனா். அஸாத்சாலியின் இந்த செயற்பாடு பொதுபலசேனாவின் செயற்பாட்டுக்கும், சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டுக்கும் ஊக்கம் வழங்கும் ஒன்றாக மாறும் என்று முஸ்லிம்களும் கருதினா்.
அஸாத்சாலியின் இந்த சவால் கூட்டம் தொடா்பாக ஒரு பாாிய விளம்பரத்தை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்றது. இனவாதிகளின் எழுச்சிக்கும், கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆா்வத்திற்கும் அஸாத்சாலியின் சவாலே காரணமானது என்பதே பலரதும் கருத்தாக இருக்கிறது.
இந்த நிலையில் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டம் ஓர் இனவாத அடிப்படையிலான கூட்டமாகும் என்று மத்திய மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அரசியல் கூட்டமொன்றுக்கு 5000த்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டுமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு தான் சவால் விடுத்திருந்ததாகவும்
எனினும் நுகோகொடவில் நடைபெற்ற கூட்டமானது ஓர் இனவாத அடிப்படையில் நடைபெற்றற கூட்டமேயாகும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புக்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தக் கூட்டத்திற்கு இனவாத அடிப்படையில் அழைப்பு விடுத்திருந்ததாகவும்,
இனவாத அடிப்படையில் அன்றி அரசியல் ரீதியாக மக்களை திரட்டியிருந்தால் நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் அவா் கூறியுள்ளாா்.
நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஐயாயிரம் பேரை அழைத்து வந்தால் அரசியலிலிருந்து விலகுவதாக முன்னதாக அசாத் சாலி சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments