Ticker

6/recent/ticker-posts

பிரிஷாந்த ஜயகொடியிடம் வாக்குமூலமொன்றை பெற நடவடிக்கை எடுக்குமாறு சுசில் கிந்தெல்பிட்டிய கோரிக்கை

முன்னாள் பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடியிடம் வாக்குமூலமொன்றை பெற நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயக கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தெல்பிட்டிய பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை  விடுத்துள்ளார்.
2010ஆம் ஆண்டு போலியான குற்றச்சாட்டொன்றை முன்வைத்து, தான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து, தமது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று காலை சென்ற ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தெல்பிட்டிய, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் கடிதமொன்றை கையளித்துள்ளார்.

Post a Comment

0 Comments