Ticker

6/recent/ticker-posts

இனவாதத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டமூலம் எமது கடந்த கால போராட்­டங்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்ற பெரு வெற்­றி­யாகும் - முஜீபுா் றஹ்மான்

இன­வாத பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்து நாட்டில் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வோ­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­ட­மூ­லத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­ய­மை­யா­னது எமது கடந்த கால போராட்­டங்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்ற பெரு வெற்­றி­யாகும் என மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பா­ளரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.
 
இதே­வேளைஇ இச்­சட்­ட­மா­னது பேரி­ன­வா­தி­க­ளுக்கு பலத்த அடி­யாகும். இச்­சட்டம் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.
இன­வாத பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்து நாட்டின் அமை­திக்கு பங்கம் ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருந்­த­மை­யா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வி­ய­டைந்தார் எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்­டிக்­காட்­டினார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இயங்­கி­வந்த இன­வாத அமைப்­பு­களை தடை­செய்­யு­மாறு நாம் வலி­யு­றுத்­தி­வந்தோம். எனினும் அவை தடை­செய்­ய­ப்ப­டாதுஇ அவர்­க­ளுக்கு தேவை­யான வச­திகள் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்­டன. இந்த பேரி­ன­வாத சக்­தி­களை முன்னாள் ஜனா­தி­பதி தமது அர­சி­ய­லுக்கு பயன்­ப­டுத்த முயற்­சித்தார். எனினும் அவரின் அர­சியல் வீழ்ச்­சிக்கு இதுவே கார­ண­மாக அமைந்து விட்­டது எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

இன­வா­திகள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக அடா­வ­டித்­த­னங்­களை அரங்­கேற்­றி­ய­போது  நாம் கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பா­கவும் தெவட்­ட­கஹ பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பா­கவும் பல கண்­டன ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்தோம் என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார் .

முஸ்­லிம்­களின் ஹலால் உண­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து அதனை தடை­செய்ய முற்­பட்­டனர். அத்­துடன் பல பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. மத­ர­ஸாக்களை மூடு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது. இவற்­றுக்­கும்­மே­லாக தர்கா நகர், அளுத்­கம, பேரு­வளை, வெலிப்­பணை மற்றும் துந்­துவ உள்­ளிட்ட பல பகு­தி­களில் இன­வா­திகள் வன்­மு­றையை தூண்­டி­விட்­டனர். இதனால் நாட்டின் அமை­திக்கு பங்கம் ஏற்­பட்­டது. இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளின்­போதுஇ நாட்டில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­தக்­கோரி மஹிந்த தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து நாடு­த­ழு­விய ஹர்­தால்­களை நடத்தி அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தோம் எனவும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். 

தனி நபர்கள் சட்­டத்தைக் கையில் எடுப்­பதை தடுக்­கு­மாறும் நாட்டில் இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­படுத்­து­மாறும் தொடர்ச்­சி­யாக அப்­போ­தைய அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­வந்­த­போது இவற்றை இவ்­வ­ரசு கண்­டு­கொள்­ள­வில்லை என முஜிபுர் ரஹ்மான் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது எதி­ர­ணி­களின் பிர­தான தேர்தல் பிரச்­சா­ர­மாக இன­வா­தி­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு சட்டம் கொண்­டு­வ­ரப்­படும் என நாம் வாக்­கு­று­தி­ய­ளித்தோம். அந்­த­வ­கையில் தற்­போது சட்­ட­மொன்று கொண்­டு­வ­ரப்­பட்டு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரமும் கிடைத்­துள்­ளது. இது உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இனவாத கும்பல் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன. இனவாதிகளின் நலனை பூர்த்திசெய்யக்கூடிய அவர் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதானது பெரும் ஆபத்தாகும். இதனை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments