Ticker

6/recent/ticker-posts

துருக்கி பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது:

துருக்கியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஏ.கே. கட்சிக்கும், குர்தீஸ் மக்கள் ஆதரவு பெற்ற எச்.டி.பி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
.
இந்த தேர்தலில் ஆளும் ஏ.கே. கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.


தற்போது 99 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஆனால் அக்கட்சி 41 சதவீத வாக்குகளை பெற்று 258 இடங்களை கைப்பற்றியுள்ளது.  தனிப்பெரும்பான்மை பெற இன்னும் 18 இடங்கள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் அக்கட்சி தனிப்பெரும்பான்மையை  இழந்துள்ளது. 

நடந்து முடிந்த தேர்தலில் குர்தீஸ் மக்களின் ஆதரவு பெற்ற எச்.டி.எப். கட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் முறையாக 10 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அக்கட்சி 75 முதல் 80 இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2003–ம் ஆண்டில் எர்டோகன் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அப்போது மூன்றில் 2 மடங்கு தனிப்பெரும்பான்மை பெற்றார். அதன் பின்னர் துருக்கியில் அதிபர் ஆட்சி முறையை புகுத்தினார். அதிக அதிகாரத்துடன் கூடிய அதிபராக அவர் பதவி ஏற்றார். 

தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கட்சி தனி தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எர்டோகன் தனது அதிகாரத்தை நீட்டிக்கவும், அரசியல் சட்டத்தையும் தன்னிச்சையாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஏ.கே. கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் எச்.டி.பி. கட்சி இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments