Ticker

6/recent/ticker-posts

சிறுவர் துஷ்பிரயோகம் ''கொண்டயா" செய்த குற்றத்தை கொட்டதெனியாவ பொலிஸும் செய்திருக்கிறது

சேயா சிறுமியின் கொலையைத் தொடர்ந்து எவ்வித அடிப்படை ஆதாரங்களுமின்றி சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். 30வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவரும் ஒரு பாடசாலை மாணவனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். மினுவான்கொடை  நீதிமன்றம் நேற்று இவர்களை விடுதலை செய்தது.  கைது செய்யப்பட்ட இருவரும் கடுமையாக பொலிஸாரால் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 17 வயது பாடசாலை மாணவனின்,ஆடைகளை பொலிஸார் களைந்திருப்பதாகவும், அவரை நிர்வாணமாக வைத்து பொலிஸார்  புகைப்படமெடுத்திருப்பதாகவும் பாடசாலை மாணவன் தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளான்.


சேயா சிறுமியின் கொலை தொடர்பாக பொலிஸாரின செயற்பாடுகள் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள நிலையில்,  சேயா சிறுமிக்கு 'கொண்டயா' என்ற கொலைக்காரன் செய்த குற்றத்திற்;கு சமனான ஒரு குற்றத்தை காக்கிச் சட்டை அணிந்த சட்டத்தின் காவலர்களான கொட்டதெனியாவ பொலிஸார் இந்த மாணவனுக்கு இழைத்திருக்கின்றனர். நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கிய மேற்படி சம்பவத்தால் பொலிஸார் திணறிப்போயிருந்தனர். நாடு முழுவதும் மக்களால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை சமாளிக்க பொலிஸார் யாரையாவது கைது செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் 17 வயது மாணவனையும் 30வயது இளைஞர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் அவசர அவசரமாக கைது செய்தனர். அவர்களை நீதிமன்றின்; முன் சந்தேக நபர்களாக நிறுத்தி சிறையிலடைத்தனர்.

ஏந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், எந்தக் குற்றமும் செய்யாத பாடசாலை மாணவனை கைது செய்த பொலிஸார் அவனது மடிக்கணினியில் ஆபாச படங்கள் இருந்ததாக அறிக்கை விட்டனர். தனது பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை எப்படியாவது கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு குற்றவாளியை ஆஜர்படுத்தி விடவேண்டும் என்ற நிலையில் யாரையாவது பிடித்து குற்றம் சுமத்தி வாக்குமூலங்களை வடிவமைத்து அவர்களை சிறைக்கு அனுப்பி வைப்பது இலங்கை பொலிஸாருக்கு கைவந்த கலையாகும். வுழமையான அந்த நிகழ்ச்சி நிரலே இந்த கொலையிலும் அரங்கேறியது.

சுட்டத்தின் காவலர்களாக இருக்கும் பொலிஸார் நிரபராதிகளை கைது செய்ததன் மூலம் பாரிய மனித உரிமை மீறலை செய்திருக்கின்றனர். சேயா சிறுமியின் கொலையாளியான 'கொண்டயா'வுக்கும் இந்த காக்கிச் சட்டைகளுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்றுதான் கூறவேண்டும். இந்த மாணவனுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொந்தரவுக்கு எதிராக பொலிஸார் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த மாணவனின் தாய் இதற்காக நஷ்ட ஈடுகோரப்போவதாக ஏற்கனவே அறிவித்தும் இருக்கிறார். ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்திய செய்தியோடு தொடர்புபட்டிருந்ததால் இந்த தவறான கைது தொடர்பாகவும் ஊடகங்கள் பேச ஆரம்பித்தன. ஆதனால் இன்று அந்த பாடசாலை மாணவன் நிரபராதியாக வெளியே வந்திருக்கிறான். இதேபோல் பேசப்படாத விடயங்கள் நிறையவே இருக்கின்றன. குற்றச் செயல்களில் சம்பந்தமேயில்லாத நிரபராதிகள் பலரை அடித்து துன்புறுத்தி  வாக்குமூலங்களைப் பெற்று அவர்களை சிறைக்கு அனுப்புவது பொலிஸாரின் வழமையான செயற்பாடாகும்.
சேயா சிறுமியின் கொலையாளி கண்டுபிடிக்க படாவிட்டால் கைதுசெய்யப்பட்ட இருவரும் இந்த பாதக செயலை செய்ததாக பலாத்காரமான முறையில் அடித்து துன்புறுத்தி வாக்குமூலத்தைப் பெற்று அந்த இருவரையும் குற்றவாளியாக்கியிருக்கவும் பொலிஸுக்கு முடிந்திருக்கும். கடந்த 16ம் திகதி கைதுசெய்யப்பட்ட மாணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும் ப டி வற்புறுத்தியதாகவும் தன்னை மிகவும் மோசமாக தாக்கி ஒப்புதல் பெற பொலிஸார் முயன்றதாகவும் இந்த மாணவன் தெரிவித்துள்ளான்.

நல்லவேளையாக உண்மையான கொண்டயா என்ற குற்றவாளி இனம்காணப்பட்டான். பாடசாலை மாணவனின் கைது தொடர்பாக மொக்கைத்தனமாக ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளாரும், பொலிஸ் உயரதிகாரி பூஜித ஜயசுந்தரவும் மாணவனின் மனித உரிமை மீறலுக்காக அவர்களுக்கு உயர் நீதிமன்றில் மனித உரிமை மீறலுக்காக வழக்கு தொடர முடியும் என்றும், பொலிஸார் சந்தேகிக்கும் ஒருவரை கைது செய்வதற்கு சட்டத்தில் இடமிருப்பதாகவும்  கதையளந்ததை கண்டு பொது மக்கள் கடும் கோபமுற்றனர்.
சுhதாரண மனிதர்களுக்கு மனித உரிமைக்காக உயர்நீதிமன்றம் சென்று வாதாட சக்தியிருக்கிறதா? பணபலமிருக்கிறதா? என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத இந்த பொலிஸ் அதிகாரிகளால்தான் இலங்கையின் சட்டம் இருட்டறைக்குள் உறங்கிக்கொண்ருக்கிறது.

மாணவனின் மடிக்கணனியில் ஆபாச படங்கள் இருந்ததாக கதைவிட்ட பொலிஸார், அந்தக்கொலைக்கும் இந்த ஆபாச படங்களுக்கும் என்ன தொடர்பு என்று சட்டத்தரணிகளின் கேள்விகளுக்கு நீதிமன்றில் பதிலளிக்க முடியாமல் திணறிப்போயிருக்கின்றனர்.

Post a Comment

0 Comments