ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு தான்தான் காரணம் என பொறுப்பேற்று நேற்றைய தினம் தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ள ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரி குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தற்கொலையில் பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பியுள்ளதோடு, அந்த கேள்விகளிலிருந்தே மறைந்துள்ள பல விடயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தக் கேள்விகளும் அதிலிருந்து வரும் பதில்களையும் சற்று நாமும் ஆராய்ந்து பார்ப்போம்.
1. மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயது இராணுவ அதிகாரி ஏன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும்?
2. தற்கொலை செய்துக் கொள்ள யாராவது அவரை தூண்டியுள்ளார்களா?
3. குறித்த கடிதத்தை எழுதியது அவரா? அல்லது வேறு யாருடையாவது சதியா?
4. லசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மலிந்த உடலகமவை, குறித்த இராணுவ அதிகாரி சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டிருப்பாரோ?
இதில் மிக முக்கியமான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும், அதாவது
5. “லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது, இரண்டு மோட்டார் வாகனங்கள் அவரை தொடர்ந்து சென்றதாக சாட்சியாளர்களால் குறிப்பிடப்பட்டிருந்தது.” அப்படி என்றால் இந்த கொலையை தான் மட்டும் செய்துள்ளதாக இராணுவ அதிகாரி அவரது கடிதத்தில் எவ்வாறு குறிப்பிட்டிருக்க முடியும்?
6. ஏன் மற்றைய நபரின் பெயர் சுட்டிக்காட்டப்படவில்லை?
7. இந்த வழக்கில் ஒரு திசை திருப்பம் உள்ளதா?
8. தூக்கு மேடை முக்கிய பிரமுகர் இருவருடைய கழுத்துக்கு மேல் தொங்கியுள்ள நிலையில், எவ்வாறு அந்த தூக்கு கயிர் திசைமாறி இராணுவ அதிகாரியின் பக்கம் போனது?
என அரசியல் ஆர்வலர்கள் பலவாறு தங்களது கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் அண்மையில் இராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
9. லசந்த கொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் இராணுவத்தை சேர்ந்தவர்களே தொடர்புடையவர்கள் என்பதாலேயே ஜனாதிபதி அந்த கருத்தை வெளியிட்டிருப்பாரோ?
10. சரி, தற்கொலை குறிப்பு உள்ளது என கூறியது யார்? என பல்வேறு கேள்விகள் எழுப்பட்டு வரும் நிலையில், இது முதலில் ஒரு தற்கொலையா? அல்லது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பணம் அனுப்ப வில்லையா?
குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் நிச்சயமாக இதே கேள்விகளை கேட்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதன்போது இந்த கொலை சம்பவம் புதிய கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றன.
அதில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கோத்தபாய மற்றும் பொன்சேகாவின் பெயர்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன, இவர்களுடைய கழுத்துக்கு மேலேயே தூக்கு கயிர்கள் தொங்கிக்கொண்டு இருப்பதாகவும், யார் சிக்கப்போகின்றார்கள் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தடீரென ஒரு பலியாடு சிக்கியது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
ஒருவேலை லசந்தவை இவரே கொலைசெய்திருந்தாலும், சுமார் 12 வருடங்களாக ஓய்வுப் பெற்ற இந்த இராணுவ அதிகாரி இப்போது தற்கொலை செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் “கொலை செய்தவன் நான் தான்” என அறிவித்திருந்தால் நீதிமன்றமே தூக்குத் தண்டனையை வழங்கியிருக்குகுமே? அது கூட தெரியாத சிரேஸ்ட இராணுவ அதிகாரியா அவர்???
இவரின் மரணத்தை பல கோணங்களில் நோக்கும் போது பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்துக் கொண்டு வருகின்றன.
இந்த கொலையை செய்தவர்கள் தாம் குற்றவாளி என்ற விடயம் அம்பலமாகிவிடும் என்ற பயத்தினால் தான் இவரை மாட்டிவிட்டார்களா? கொலை செய்துவிட்டு கடிதத்தை எழுதி வைத்துள்ளார்களா?
பயத்தில் செய்யப்பட்ட சதியாக இருக்கலாமோ? குறித்த இராணுவ அதிகாரிக்கு பல அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டனவோ?
இதில் சுட்டிக்காட்டத்தக்க விடயம் ஒன்று உண்டு. லசந்த கொலையில் சந்தேகப்பட்ட இருவரில் ஒருவரான கோத்தபாய தற்போது நாட்டில் இல்லை என்ற விடயமும் சற்றே முனுமுனுக்கப்படுகின்றமையை ஆர்வலர்கள் காதில் விழத்தான் செய்கின்றன. நன்றி : Thamil Thanthi
இந்த தற்கொலையில் பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பியுள்ளதோடு, அந்த கேள்விகளிலிருந்தே மறைந்துள்ள பல விடயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தக் கேள்விகளும் அதிலிருந்து வரும் பதில்களையும் சற்று நாமும் ஆராய்ந்து பார்ப்போம்.
1. மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயது இராணுவ அதிகாரி ஏன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும்?
2. தற்கொலை செய்துக் கொள்ள யாராவது அவரை தூண்டியுள்ளார்களா?
3. குறித்த கடிதத்தை எழுதியது அவரா? அல்லது வேறு யாருடையாவது சதியா?
4. லசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மலிந்த உடலகமவை, குறித்த இராணுவ அதிகாரி சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டிருப்பாரோ?
இதில் மிக முக்கியமான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும், அதாவது
5. “லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது, இரண்டு மோட்டார் வாகனங்கள் அவரை தொடர்ந்து சென்றதாக சாட்சியாளர்களால் குறிப்பிடப்பட்டிருந்தது.” அப்படி என்றால் இந்த கொலையை தான் மட்டும் செய்துள்ளதாக இராணுவ அதிகாரி அவரது கடிதத்தில் எவ்வாறு குறிப்பிட்டிருக்க முடியும்?
6. ஏன் மற்றைய நபரின் பெயர் சுட்டிக்காட்டப்படவில்லை?
7. இந்த வழக்கில் ஒரு திசை திருப்பம் உள்ளதா?
8. தூக்கு மேடை முக்கிய பிரமுகர் இருவருடைய கழுத்துக்கு மேல் தொங்கியுள்ள நிலையில், எவ்வாறு அந்த தூக்கு கயிர் திசைமாறி இராணுவ அதிகாரியின் பக்கம் போனது?
என அரசியல் ஆர்வலர்கள் பலவாறு தங்களது கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் அண்மையில் இராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
9. லசந்த கொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் இராணுவத்தை சேர்ந்தவர்களே தொடர்புடையவர்கள் என்பதாலேயே ஜனாதிபதி அந்த கருத்தை வெளியிட்டிருப்பாரோ?
10. சரி, தற்கொலை குறிப்பு உள்ளது என கூறியது யார்? என பல்வேறு கேள்விகள் எழுப்பட்டு வரும் நிலையில், இது முதலில் ஒரு தற்கொலையா? அல்லது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பணம் அனுப்ப வில்லையா?
குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் நிச்சயமாக இதே கேள்விகளை கேட்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதன்போது இந்த கொலை சம்பவம் புதிய கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றன.
அதில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கோத்தபாய மற்றும் பொன்சேகாவின் பெயர்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன, இவர்களுடைய கழுத்துக்கு மேலேயே தூக்கு கயிர்கள் தொங்கிக்கொண்டு இருப்பதாகவும், யார் சிக்கப்போகின்றார்கள் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தடீரென ஒரு பலியாடு சிக்கியது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
ஒருவேலை லசந்தவை இவரே கொலைசெய்திருந்தாலும், சுமார் 12 வருடங்களாக ஓய்வுப் பெற்ற இந்த இராணுவ அதிகாரி இப்போது தற்கொலை செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் “கொலை செய்தவன் நான் தான்” என அறிவித்திருந்தால் நீதிமன்றமே தூக்குத் தண்டனையை வழங்கியிருக்குகுமே? அது கூட தெரியாத சிரேஸ்ட இராணுவ அதிகாரியா அவர்???
இவரின் மரணத்தை பல கோணங்களில் நோக்கும் போது பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்துக் கொண்டு வருகின்றன.
இந்த கொலையை செய்தவர்கள் தாம் குற்றவாளி என்ற விடயம் அம்பலமாகிவிடும் என்ற பயத்தினால் தான் இவரை மாட்டிவிட்டார்களா? கொலை செய்துவிட்டு கடிதத்தை எழுதி வைத்துள்ளார்களா?
பயத்தில் செய்யப்பட்ட சதியாக இருக்கலாமோ? குறித்த இராணுவ அதிகாரிக்கு பல அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டனவோ?
இதில் சுட்டிக்காட்டத்தக்க விடயம் ஒன்று உண்டு. லசந்த கொலையில் சந்தேகப்பட்ட இருவரில் ஒருவரான கோத்தபாய தற்போது நாட்டில் இல்லை என்ற விடயமும் சற்றே முனுமுனுக்கப்படுகின்றமையை ஆர்வலர்கள் காதில் விழத்தான் செய்கின்றன. நன்றி : Thamil Thanthi

0 Comments