
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்திலுள்ள ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் கேப்பாப்புலவு சிறுவர்களுக்கும் உளவள செயற்பாடுகளை வழங்கினர்.
மேலும், கேப்பாப்புலவு காணியை விடுவிப்பதற்காகத் தொடர்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்களுக்காக காலைமுதல் மாலைவரை போராட்டக் களத்தில் தங்கியிருந்து இன்றைய மதிய உணவுகளுக்கான பொருட்களையும் வழங்கி போராட்டக் களத்திலுள்ள மக்களுடன் இணைந்து மக்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், சிறுவர்களுக்கான ஓவியம், நாடகம், விளையாட்டுக்கள், பாடல்கள் போன்றவற்றுடனான ஆற்றுப்படுத்தல்களிலும் ஈடுபட்டனர்.
இந்த ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அத்துடன் சில நல்லுள்ளங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களையும் கையளித்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்தும் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் வந்து கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.LankaSee
0 Comments