முஸ்லிம் பெண்கள் கருப்பு நிற அபாயா அணிவது கட்டாயமில்லை! என சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான்முஸ்லிம் பெண்கள் கருப்பு நி
றத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை எனவும் இஸ்லாம் கூறியுள்ள முறையில் கௌரவமான முறையில் ஆடை அணியாலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க CBS நிவ்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய அவரது நேர்காணலிலேயே முகம்மது பின் சல்மான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு இவர் வழங்கிய முதலாவது நேர்காணல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நேர்காணலில் ஈரானைப் பற்றியும் அவரது எண்ணங்களை பகிர்ந்து கொண்ட முஹம்மத் பின் சல்மான் யேமனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி மற்றும் சவுதியின் கடந்தகால மற்றும் எதிர்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
32 வயதான சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் 82 வயதான அவரின் தந்தையான மன்னர் சல்மானினால் ஒன்பது மாதங்களுக்கு முன்பு அரச சிம்மாசனத்திற்கு வாரிசாக நியமிக்கப்பட்டார்.
0 Comments