எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்காவில் அவரது வதிவிடம் அமைந்துள்ள லொஸ் ஏஞ்சல்சில் தங்கியிருந்ததை விட அதிக நாட்களை வொசிங்டனில் தான் செலவிட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்காவில் அவரது வதிவிடம் அமைந்துள்ள லொஸ் ஏஞ்சல்சில் தங்கியிருந்ததை விட அதிக நாட்களை வொசிங்டனில் தான் செலவிட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
அமெரிக்க குடியுரிமையை துறப்பது தொடர்பான ஆவணங்களை அவர் ஏற்கனவே கையளித்து விட்டார் என்றும், அதனை உறுதிப்படுத்தும் பதிலுக்காக காத்திருக்கிறார் என்றும், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையிலேயே, தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

0 Comments