( ஐ. ஏ. காதிர் கான் )
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 1,683 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 26 மாவட்டங்களில் தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், தொழுநோய்க் கட்டுப்பாட்டுத்திட்டப் பணிப்பாளர், வைத்தியர் சம்பா ஜே. அலுத்வீர சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுச் சபையில், (04) திங்கட்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், மேல் மாகாணத்தில் புதிதாக 41 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 691 ஆகும்.
மேலும், 6 மாதங்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்பட்ட 30 சதவீதத்தினர் சிகிச்சைகளைப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படின், உரிய முறையில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டால், இந்நோயைக் குணப்படுத்திக்கொள்ள முடியுமென வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

0 Comments