மேல்மாகாண ஆளுநர் எ.ஜே.எம். முஸம்மில் அவர்கள் வெள்ளிக் கிழமை அன்று கொழும்பு பிஷப் இல்லத்திற்கு விஜயம்செய்து பேராயர் மெல்கம் ரஜ்சித் அவர்களை சந்தித்து எதிர்வரும் 30.07.2019 அன்று தாமரை தடாக அரங்கில் நடைபெறவுள்ள சமாதானம், அமைதி மற்றும் சகவாழ்வு நல்லிணக்க மாநாட்டிற்கு அதிதியாக வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
நாட்டின் சகல சமூகங்களுக்கிடையே ஐக்கியம், சமாதானம், புரிந்துணர்வை கட்டயெழுப்பும் நோக்கிலே இம் மாநாடு நடத்தப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.
0 Comments