நாளை (20) ஜூம்ஆ தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒன்று கூட வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீண்டும் முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா அபாயம் காரணமாக ஒன்று கூடல்களை தவிர்க்குமாறும், அவ்வாறு ஒன்றுகூடுவது சட்டத்திற்கு முரணானது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமையினால், அதன்படி செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூம்ஆ தொழுகைக்காகவோ அல்லது ஐவேளை தொழுகைக்காகவோ மஸ்ஜித்களில் ஒன்று சேர்வதைத் தவிர்த்து, தாம் இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளும் படி வக்ப் சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் அறிவித்துள்ளது.
0 Comments