Ticker

6/recent/ticker-posts

டெல்லி மாணவி நிர்பயா கொலை வழக்கு, குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்!


டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில்
2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால், குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

ஒருவர் திஹார் சிறையில் தற்கொலை செய்துகொள்ள முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்ஷய் குமார் சிங் ஆகிய  நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கடந்த  ஏழு வருடங்களாக கருணை மனு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று சட்டப்போராட்டம் நீடித்துக்கொண்டே போனதால், தண்டனையை நிறைவேற்றுவது தாமதமாகியது.

மூன்று முறை தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகதி அறிவிக்கப்பட்டு பின்னர், ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று, குற்றவாளிகளில் இருவரான முகேஷ் சிங் மற்றும் அக்ஷய் குமார் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், இன்று அவர்களுக்கு தூக்குத் தண்டனை உறுதியானது.
பவன் குப்தா, சம்பவம் நடைபெற்றபோது தான் டெல்லியில் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்

அதேபோல், மற்றொரு குற்றவாளியான அக்ஷய் குமார், குடியரசுத் தலைவர் கருணை மனு நிராகரித்ததை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார். இதனை நேற்று பிற்பகல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று காலை 5.30மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்படுவது உறுதியானது.

இதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. சிறைக்கு வெளியே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
சரியாக 5.30 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments