நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போது ஒரு பிரதேச சபை உறுப்பினர் அவரின் வீட்டில் கசிப்பு வடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (04 ஆம் திகதி) கட்டுகஸ்தோட்டை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சந்தேக நபரை அவரது வீட்டில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டில் இருந்து கசிப்பு வடிக்க பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலின்டர் மற்றும் வடிக்கப்பட்ட சசிப்பு ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைதாகிய பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

0 Comments