Ticker

6/recent/ticker-posts

சவுதி மன்னர் குடும்பத்தின் மருத்துவ மனை உசார் நிலையில்!

சவுதி மன்னர் குடும்பத்தின்  உறுப்பினர்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து , சவுதியின் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு சிகிச்சையளிக்கும் சவுதி அரேபியாவின் உயர் மருத்துவமனை “மிகுந்த உசார் நிலையில் ” இருப்பதாகக் கூறப்படுகிறது.

நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள  ஒரு செய்தியின்படி, சவுதியில் மன்னர் குடும்ப 150 உயர்குடிகளுக்கு  கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

சவுதி இளவரசர் பைசல் பின் பந்தர் பின் அப்துல்அஸீஸ்  வைரஸ் பாதிப்புக்கு பின்னர் தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரச குடும்பத்தைச் சேர்ந்த பல  உறுப்பினர்களும் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக  மிடல்ஈஸ்ட் மொனிடர் Middle East Monitor இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments