“பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு செய்வதற்கு முஷர்ரப் என்பவர் தடையாக இருப்பது நியாயமா?” என ஊடகவியலாளர் ஒருவர், நேற்று (20) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேள்வி எழுப்பியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“பலாத்காரமாகவும் அடாத்தாகவும் அங்கு சென்று, மக்களின் பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதனால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, முதலில் பிரதேசவாழ் மக்களோடு பேசவேண்டும். குறிப்பாக பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் வாயிலாக பள்ளி நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகளுக்கு இதனை தெளிவுபடுத்துவதோடு, அவர்களின் கருத்துக்களையும் உளவாங்கியிருக்க வேண்டும்.
மக்களின் பூர்வீக விடயங்கள், உறுதிப்பத்திரம் மற்றும் இதுதொடர்பிலான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையான செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே, இதுதொடர்பிலான நடவடிக்கை எடுப்பது சரியானது” என்று கூறினார்.

0 Comments