Ticker

6/recent/ticker-posts

எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் தனது தெளிவான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் - ரணில்


எம்.சி.சி ஒப்பந்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறதா இல்லையா என்பது குறித்து தெளிவா தனது நிலைப்பாட்டை   வெளியிட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.

எம்.சி.சி ஒப்பந்தம் குறித்த அரசாங்கம் அமெரிக்காவுக்கு அறிவித்துள்ள நிலைப்பாட்டை   நாட்டிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று (27) சேதவத்த  வெஹரகொட  விகாரையில் இடம்பெற்ற  மத வைபவத்தில்  கலந்து கொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும் போது அரசாங்கத்திடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

Post a Comment

0 Comments