கெகிராவா, ஹோமகம, அகுரெஸ்ஸ , இரத்னபுரி, தங்கல்லே, கண்டி, பம்பரதெனிய, ஹசலக, கம்பளை, ராஜாங்கன, கந்தளாய், ராகம மற்றும் மொரட்டுவை போன்ற பகுதிகளில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய 661 பேர் நேற்று (14) சுய தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதம் 7 ஆம் திகதி முதல் 516 பேர் வைரஸ் தொற்று நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோவிட் -19 வைரஸ் நோயிலிருந்து குணமடைந்து 1988 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியிருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட 658 பேர் எட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை பதிவாகியுள்ள தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2657 ஆகும்.

0 Comments