Ticker

6/recent/ticker-posts

நுகேகொடை பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் ராணுவ வீரர் பலி!


இன்று (20) காலை நுகேகொடை  மேம் பாலத்தில்   தனியார் பஸ் ஒன்று  இராணுவ வாகனத்துடன்  நேருக்கு நேர் மோதியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் மற்றொரு பஸ்ஸைக் கடக்க முயன்றபோது நேர் எதிரில் வந்துகொண்டிருந்த ராணுவ வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர்  ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ராணுவ வாகனத்தின்  ஓட்டுநராக இருந்த இராணுவ வீரர் விபத்தில் இறந்துள்ளார்.

மேலும் இரண்டு வீரர்கள் காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments