இம்மாதம் முதல் வாரத்தில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் இந்த நாட்களில் வேகமாக பரவி வருவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் அதிகளவான பாதிப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். நோய் பரவும் அபாயம் உள்ள 08 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் 82 சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களை டெங்கு பரவும் அபாயம் உள்ள பிரதேசங்களாக அறிவித்து, உாிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
0 Comments