இலங்கை அதிகாரிகள் தவறான வகை மசகு (crude oil) எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயில் தவறான வகை நாப்தா திரவம் (Naphtha liquid) உள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.
புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயில் உள்ள நாப்தாவில் அதிக அளவு கந்தகம் உள்ளதாகவும், அதை மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
புதிய மசகு எண்ணெய் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த ஜனக ரத்நாயக்க, அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அதனை இறக்குமதி செய்தவா்களே குடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
உள்ளூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 Comments