கடந்த வாரம் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை இந்திய துருப்புக்கள் தடுத்த போது, இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் செவ்வாயன்று கூறினார்,
இந்தியாவின் வடகிழக்கு இமயமலை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது, இது சீனாவின் தெற்கே எல்லையாக உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் டாவாங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இம்மோதல் இடம்பெற்றதாக இந்திய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
இம்மோதலில் இரு நாடுகளின் படையினருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 20 இந்திய படையினர் காயமடைந்ததாகவும் அதிக எண்ணிக்கையான சீன படையினருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவத்தின் பின்னர், அமைதியை உறுதிப்படுத்துவதற்காக இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய, சீன படையிருக்கு இடையில் சுமார் ஒன்றரை வருடத்தின் பின் ஏற்பட்ட முதல் மோதல் இதுவாகும்
2020 ஆம் ஆண்டு லடாக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் படையிருக்கும் ஏற்பட்ட மோதலில் குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments