(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் வழிகாட்டலில் உணவே மருந்து- மருந்தே உணவு எனும் தொனிப்பொருளில் உணவகங்களில் திடீர் பரிசோதனைகள் திங்கட்கிழமை (21) இடம்பெற்றது.
மேற்படி பரிசோதனைகள் தற்போதைய காலகட்டத்தில் ஹோட்டல்களின் தரத்தைப்பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நீரில் கழுவாமல் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் சீர்குலைந்து காணப்பட்ட பாத்திரங்கள் மற்றும் ஒரு தடவை உபயோகித்த பின்னர் மீள்பாவனைக்காக வைக்கப்பட்ட எண்ணெய்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
எனவே இதனை தடுக்கும்பொருட்டும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதை கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் பொதுமக்களை கேட்டுள்ளார்.
இப்பரிசோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பொது சுகாதார் பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆகியோரும் இப்பரிசோதனை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
0 Comments