தமிழ் திரைப்பட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சென்னை மருத்துவமனையில் காலமானார். உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த பாலசந்தர் உயிர் மாலையில் பிரிந்தது. நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த பாலசந்தர் 100 படங்களை இயக்கியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்புதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930 ஜுலை 9-ம் தேதி கே.பாலசந்தர் பிறந்தார். பள்ளி பருவத்தில் நாடகங்கள் நடத்துவதில் பாலசந்தர் மிகுந்த ஆர்வம் கொண்டவராவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் 1930 ஜுலை 9-ம் தேதி கே.பாலசந்தர் பிறந்தார். பள்ளி பருவத்தில் நாடகங்கள் நடத்துவதில் பாலசந்தர் மிகுந்த ஆர்வம் கொண்டவராவர். அண்ணாமலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியராக பணியை தொடங்கினார். ஆசிரியர் பணிக்கு பின் சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
சென்னையில் பணிபுரிந்த போது நாடகத்துறையில் பாலசந்தர் தடம் பதித்தவர். எம்ஜிஆர் அழைப்பை ஏற்று 1965-ல் தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். நீர்க்குமிழி படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக பாலசந்தர் தடம் பதித்தார். மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா, விஜயம் படங்களை இயக்கினார். இயக்குநர் சிகரம் என பாலசந்தர் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
பால்கே விருது பெற்றவர்
இந்திய திரையுலகின் தலைசிறந்த பால்கே விருது பெற்றவர் இயக்குநர் கே.பாலசந்தர் ஆவார். 1969&ல் இயக்கிய இருகோடுகள் படத்துக்கு முதல் முதலாக தேசிய விருது பெற்றார். அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர் உள்பட ஏராளமான படங்கள் விருது பெற்றுள்ளன. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளத்திலும் படங்கள் இயக்கியவர்.

0 Comments