Ticker

6/recent/ticker-posts

100 நாட்களுள் மாபெரும் வீடமைப்புத் திட்டம்



எதிர்வரும் 100 நாட்களுக்குள் இலங்கையின் மாபெரும் வீடமைப்பு திட்டமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக வீடமைப்பு மற்றும் சமூர்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நாட்டில் சொந்த வீடு இல்லாமல் அல்லற்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு சொந்த வீடுகளை அமைத்துக் கொடுக்கும் முகமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்த சிரிசேன குரேயை தலங்கமவில் அமைந்துள்ள  அவரது இல்லத்தில் சந்தித்த போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments