தன்னை வீழ்த்துவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் வெளிப்படையாக செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதற்காக, இந்திய தனது தூதரகத்தையும், றோவையும் பயன்படுத்தியதாகவும், அமெரிக்கா மேற்கு நாடுகளின் ஒத்துழைப்போடு செயலாற்றியதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவை தேவையற்ற விதத்தில் உள்நாட்டு அரசியலுக்குள் இழுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த நாட்டுக்கு அநீதியான விதத்தில் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
'சௌத் சீனா மோர்னிங் போஸ்டி'ற்கு அளித்துள்ள பேட்டியிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

0 Comments