Ticker

6/recent/ticker-posts

சரத் பொன்சேக்கா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

தனது பாராளுமன்ற உறுப்புரிமையை மீளப் பெற்றுத்தருமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையில் பாராளுமன்ற அமர்வுகளில் ஜயந்த கெடகொடவை தடைசெய்யும் வகையில், இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனநாயக கட்சியின் தலைவர் ஜென்ரல் சரத் பொன்சேக்கா தாக்கல்செய்த கோரிக்கை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று  நிராகரிக்கப்பட்டுள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் ஏ.ஜீ.சி மடவல ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த கோரிக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பரிசீலனையைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணை மே மாதம்27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments