Ticker

6/recent/ticker-posts

கால்வாய் வெட்­டி­யவன் நான். ஆனால் தண்ணீர் குடிப்­பதோ வேறு ஒருவர் - ஹுனைஸ் பாரூக்



உயிரைப் பணயம் வைத்து நல்­லாட்­சிக்கு வழி­ச­மைத்தோம். யார் யாரை­யெல்லாம் தூக்­கி­யெ­றிய வேண்­டு­மென்று மக்கள் நினைத்­தார்­களோ அவர்கள் இன்­றைய தேசிய அரசாங்கத்தின் நல்­லாட்­சியில் அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றனர். 

கால்வாய் வெட்­டி­யவன் நான். ஆனால் தண்ணீர் குடிப்­பதோ வேறு ஒருவர் என்று ஆளுங்­கட்சி எம்.பியான ஹுனைஸ் பாரூக் பாரா­ளு­மன்­றத்தில் ஆதங்கம் வெளி­யிட்டார். எவ்­வ­ளவு விரை­வாக இப்­பா­ரா­ளு­மன்­றத்தைக் கலைக்க முடி­யுமோ அவ்­வ­ளவு விரை­வாக கலைத்து தேர்தல் நடத்தி நேர்­மை­யா­ன­வர்கள் தெரிந்­தெ­டுக்­கப்­பட வேண்டும் என்­ப­துடன் அவ்­வா­றா­ன­வர்­க­ளையே அமைச்­சர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட வேண்­டுமே தவிர மோச­டி­யி­னர்­களை அல்ல என்றும் கூறினார். 

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற உள்­நாட்டு திறை சேரி உண்­டியல் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் தீர்­மா­னங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

ஹுனைஸ் பாரூக் எம்.பி இங்கு மேலும் கூறு­கையில், நல்­லாட்சி ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் உயிரைப் பணயம் வைத்து உழைத்தோம். இதற்­காக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து விலகி முத­லா­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைந்து கொண்ட முஸ்லிம் உறுப்­பி­ன­ராக இருக்­கின்றேன். 82 நாட்கள் கடந்­துள்ள இந்­நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பாரா­ளு­மன்­றத்தில் ஐந்து தட­வை­க­ளாக இங்கு ஆசன மாற்றம் ஏற்­பட்டு விட்­டது. இங்கு ஆச­னங்­களைத் தேடி சங்­கீ­தக்­க­திரை ஓட வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

Post a Comment

0 Comments