Ticker

6/recent/ticker-posts

இஸ்மாயில் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தேர்தலில் போட்டியிட முடியாது எனக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ் ரிட் மனு தாக்கல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித கே மலால் கொட  முன்னிலையில் நடைபெற்ற விசாரனையில் மனுதார சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் பிரதிவாதிகளான   அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சட்டமா அதிபர் விகும் டி அப்றோ ,ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாப,; வழக்கறிஞ்கள்  என்.எம்.ஷஹிட், ஹிஜாஸ் ஹிஸ்புல்ஹ, ரூஸ்தி ஹபீட் ஆஜராகியிருந்தனர்.


கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் உரிய காலப் பகுதியில் தனது சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்பதால் அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்ய உத்தரவிடக் கோரியே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்ச பீட உறுப்பினர் சட்டத்தரணி முஸ்தபாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இதன்போது நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதேவேளை கலாநிதி இஸ்மாயில் வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் ஜூலை 22ம் திகதியே தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் என சட்ட மா அதிபர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார். 
இவற்றை செவிமடுத்த நீதிபதி, கே மலால் கொட, கலாநிதி இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அது விடயமாக இன்னொரு மனுவைத் தாக்கல் செய்யும் உரிமை மனுதாரருக்கு உள்ளது எனினும் மனுதாக்கல் தவரான முறையிலும் தாக்கல் செய்ப்பட்டதுடன் இப்போது கலாநிதி இஸ்மாயிலை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்குக் கிடையாது எனவும் அதனால் இம்மனுவை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.

Post a Comment

0 Comments