அத்துருகிரிய கொஸ்கந்தவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை முச்சக்கரவண்டியொன்று குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு செலுத்தப்பட்டபோது பஸ் ஒன்றுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


0 Comments