Ticker

6/recent/ticker-posts

கஹவத்தையில் மீன்தொட்டியில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

கஹவத்தை, பனாவென்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீன்தொட்டியில் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
ஒரு வருடமும், 2 மாதங்களும் நிரம்பிய குழந்தையே மீன்தொட்டியினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது வீட்டிலிருந்து 500 மீற்றர் தூரத்திலுள்ள உறவினர் வீட்டிலுள்ள மீன்தொட்டியிலேயே குழந்தை நேற்று (02) மாலை வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட வீட்டில் குழந்தையின் பாட்டன் மற்றும் பாட்டி ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தையின் உடலை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments