Ticker

6/recent/ticker-posts

இராணுவத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி


கூட்டு எதிரணியை சாடுகிறது ஐ.தே.க.

கூட்டு எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர்கள் பல குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் சிறை­யி­டப்­ப­ட்டுள்ள இரா­ணுவ வீரர்­களை நலம் விசா­ரிக்கச் சென்று  இரா­ணு­வத்தின் கவ­னத்­தையும் ஆத­ர­வையும் தம் பக்கம் ஈர்த்­துக்­கொள்ள முற்­ப­டு­கின்­றனர்.


அதே­நேரம்  ஆர்ப்­பாட்­டத்தில் விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்­களை ஈடு­ப­டுத்தி இர­ாணு­வத்தின் ஆத­ரவை திரட்டி அவர்­களின் உத­வி­யுடன் சதி செய்து ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்றனர் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­த­வில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
கொழும்­பிலும் வெளி­யி­டங்­க­ளிலும் பல ஆர்ப்­பாட்­டங்­களை நாளாந்தம் முன்­னெ­டுக்­கப்­படு வரு­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த நாள் தொடக்கம் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு குறைவில்லை. இந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் வீதி­களை மறித்து பேராட்­டங்­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

வேறு­பட்ட கார­ணங்கள் பல­வற்றை முன்­னி­லைப்­ப­டுத்தி வெவ்­வேறு தரப்­புக்கள் இந்த ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. குறிப்­பாக விசேட தேவை­யு­டைய இர­ணுவ வீரர்கள், தொழிற்­சங்கங்கள், அர­சியல் கட்­சிகள் என பல தரப்­புக்கள் ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. அதனால் மக்­களின் அடிப்­படை செயற்­பா­டு­களில் ஒன்­றாக ஆர்ப்­பாட்டம் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளது.

சிலர் மேற்­கொள்ளும் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்­கான காரணம் என்­ன­வென்­று­கூடத் தெரி­வ­தில்லை. 

அவ்­வா­றில்­லாமல் உரிமை படி­மு­றை­களை பின்­பற்­றிய பின்பு அவர்­களின் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­டாத பட்­சத்­தி­லேயே ஆர்ப்­பாட்­டத்­தினை முன்­னெ­டுக்க வேண்டும். ஆனால் தற்­போது நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. 

இதன் பின்னால் அர­சியல் கார­ணிகள் உள்­ளன. அர­சியல் குழுக்­களின் தூண்­டு­த­லி­னா­லேயே இவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இவர்கள் திட்­ட­மிட்டு சில குழுக்­களை ஒவ்­வொ­ரு­நாளும் ஆர்ப்­பாட்டத்தில் ஈடு­பட தூண்­டு­கின்­றனர்.

நாட்டில் அமை­தியை குலைக்கும் நோக்­கில்தான் பல்­வேறு போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அத்­துடன் புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பிள­வு­படும் என மக்­க­ளி­டத்தில் தவ­றான கருத்­துக்­களை பரப்­பு­கின்­றனர். 

மறு­பு­றத்தில், பல குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் கைதா­கின்ற இரா­ணு­வத்­தி­னரை பாது­காப்­ப­தாகக் கூறிக்­கொண்டு கூட்டு எதி­ர­ணி­யினர் சிறை­க­ளுக்குச் செல்­கின்­றனர்.  பாதிக்­கப்­பட்ட இரா­ணுவ வீரர்­க­ளையும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டுத்தி இரா­ணு­வத்­தி­னரை தம்­பக்­க­மாக ஈர்த்­துக்­கொண்டு இரா­ணு­வத்தின் உத­வி­யு­ட­னான சதி­யொன்­றினை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இந்த செயற்பாடுகள் கூட்டு எதிர்க்கட்சியினால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இடம்பெறுகின்றன.

இதன் பின்னணி காரணம் என்வென்று பார்க்கையில் கூட்டு எதிரணிக்கு ஒருபோதும் மக்கள் ஆதரவு கிடையாது. அதனால் அவர்கள் மாற்று வழிமுறைகளை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற முற்படுகின்றனர் என்றார்.
vidivelli.lk

Post a Comment

0 Comments