ஹெரோயின் வர்த்தகத்தின் மூலம் சுமார் 52 கோடி ரூபாவை உழைத்ததாகக் கூறப்பட்டு, மூன்றரை வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல ஹெரோயின் கடத்தல்காரரான மொஹமட் சித்தீக் எனப்படும் "குடு சித்தீக்" பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளில் மொஹமட் சித்தீக்கை விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன அவருக்கு மேலதிகமாக வெளிநாடு செல்வதற்கு தடையையும் விதித்ததோடு மாதம் இருமுறை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறும் கட்டளை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2014 மே வரையான காலப்பகுதியில் ஹெரோயின் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சுமார் 52 கோடி ரூபாவை உழைத்த குற்றச்சாட்டில் பணச்சலவை சட்டத்தின் கீழ் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் பிரதிவாதி தரப்பான சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட அரச சட்டவாதி ஸ்ரமிந்த விக்ரம, சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான சம்பவத்தின் சந்தேகநபர் என சுட்டிக்காட்டினார். இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிபதி இவ்வாறு பிணையை வழங்கி நிபந்தனை விதித்தார்.
10 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளில் மொஹமட் சித்தீக்கை விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன அவருக்கு மேலதிகமாக வெளிநாடு செல்வதற்கு தடையையும் விதித்ததோடு மாதம் இருமுறை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறும் கட்டளை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2014 மே வரையான காலப்பகுதியில் ஹெரோயின் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சுமார் 52 கோடி ரூபாவை உழைத்த குற்றச்சாட்டில் பணச்சலவை சட்டத்தின் கீழ் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் பிரதிவாதி தரப்பான சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட அரச சட்டவாதி ஸ்ரமிந்த விக்ரம, சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான சம்பவத்தின் சந்தேகநபர் என சுட்டிக்காட்டினார். இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிபதி இவ்வாறு பிணையை வழங்கி நிபந்தனை விதித்தார்.

0 Comments