இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எம். ஹனீபா தலைமையில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பலபாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இலங்கையில் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கேட்டறியும் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், திணைக்களத் தலைவர்களை சந்தித்து மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டுள்ளது.
0 Comments