Ticker

6/recent/ticker-posts

தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 311 பேர் வெளியேறினர்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக கண்டறிய  அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து  முதலாவது   குழு வெளியேறியுள்ளது.

இவர்கள் கந்தகாடு  மற்றும் புனானையில்  உள்ள தனிமைப்படுத்தப்படும் மையங்களை விட்டு வெளியேறியதாக  இராணுவம் அறிவித்துள்ளது.
311 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டு வெளியாகியுள்ளனர்.

இதில் காந்தக்காடு  தனிமை மையத்திலிருந்து 108 பேரும்  புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 203 பேரும் வெளியேறியதாக மேலும் அறிவிக்கபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை  தடுக்கும் நடவடிக்கையாக  வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களை  தனிமைப்படுத்தப்படுத்துவதற்காக இந்த  மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டன.

Post a Comment

0 Comments