வெள்ளவத்தையில் உள்ள ஸ்வர்ணா வீதியில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தினால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இரு நபர்களிடையே வாக்குவாதம் கொலையில் முடிந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலியானவர் வெள்ளவத்தையில் வசிக்கும் 34 வயதுடையவர். இந்த கொலையில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

0 Comments