Ticker

6/recent/ticker-posts

தோ்தல் தினத்தில் பாவிக்கப்படும் கிருமி நீக்கி திரவத்திற்கு 15 கோடி ரூபாய் செலவாகும்!


வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படவிருக்கும் கிருமி நீக்கும்  திரவப் பொருட்களை வாங்குவதற்கு  15 கோடி ரூபாய்கள் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

தோ்தல் தினத்தில் பாவிக்கப்பட வேண்டிய கிருமிநாசினி யின்  தரநிலை (விவரக்குறிப்பு)  தொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்களால் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பொதுத் தேர்தலின் தேவைக்காக  சுமார் ஒரு லட்சத்து 63 ஆயிரம் மில்லி லீட்டர்கள்   கை சுத்திகரிப்பு திரவம் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிங்கப்பூரில் இருந்து வாக்காளர்களின் விரல்களுக்கு பூசுவதற்கு பயன்படுத்தப்படும்  வண்ணப்பூச்சுகளை  வாங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments