கொரோனா வைரஸ் nதாற்றால் இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் 40 பேர் மரணித்துள்ளனர், அவர்களில் 37 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்களாவர்.
சவூதி அரேபியாவில் 18 பேரும், குவைத்தில் 9 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 8 பேரும், ஓமான் மற்றும் கத்தார் நாட்டில் தலா இரண்டு பேரும், லெபனானில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டில் பணிபுரியும் போது ஒரு சாதாரண மரணத்திற்கு ரூபா 5 இலட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. கொரோனா நோயால் இறக்கும் தொழிலாளர்களுக்கும் இதே தொகை வழங்கப்படவிருக்கிறது, இதற்காக 20 கோப்புகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

0 Comments