Ticker

6/recent/ticker-posts

ரம்புக்கனை - கொழும்பு ரயிலின் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம்!


ரம்புக்கனை - கொழும்பு ரயிலின் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பெட்டியொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவா் தொடா்பான அடையாளம் உறுதி செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் அதிகாலை 4.40 மணியளவில் புகையிரதம் இயங்கத் தொடங்குவதற்கு முன்னர் சாரதியின் உதவியாளா் ரயிலில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயதுடைய அந்த நபர் வெள்ளை நிற சாரமும், சிவப்பு கருப்பு கலந்த சோ்ட்டும் அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பொல்கஹவெலவில் இருந்து பண்டாரவளைக்கு செல்லும் புகையிரத பயணச்சீட்டும் உயிரிழந்த நபரிடம் இருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments