ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய குழு இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமை குறித்து ஜனாதிபதி கோத்தாபயவுடன் கலந்துரையாடியுள்ளது.
.
அண்மையில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஒமான், பாலஸ்தீன், கத்தாா், குவைத், எகிப்திய , ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளின் தூதுவா்கள் இதில் கலந்து கொண்டனா்.
சீனா மற்றும் இந்திய தூதுவா்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(புகைப்படம்: ஜீவன் சந்திமால் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
0 Comments