Ticker

6/recent/ticker-posts

பெசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ அமொிக்கா பயணம்!

முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து EK649 என்ற எமிரேட்ஸ் விமானத்தில்  டுபாய் ஊடாக அமெரிக்கா நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்சவின் பிள்ளைகள் அமெரிக்கா
வில் வாழ்கின்றனா். பெசில் ராஜபக்ஷ  இன்று (9) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தனது பதவி விலகலை அறிவிக்க உள்ளார்.

பின்னர் அவர் அமெரிக்கா செல்வதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பசில் ராஜபக்சவுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாத காரணத்தினால் 21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பதவி விலகப் போவதாகவும் முன்னர் அறிவித்திருந்தார்.

அண்மைக்கால அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் “கப்புட்டு காக்.. காக்..” என்ற எதிா்ப்பு சுலோகங்களில் பெசில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாா்.

Post a Comment

0 Comments