முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று (02) இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜுலை மாதம் 09 ம் திகதியன்று போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனா். இந்த முற்றுகையின் பின்னா் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த ஜூலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.
மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ தனது பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ததை அடுத்து இன்று (02) இரவு இலங்கை திரும்புவார் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் திருமதி அயோமா ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. மிரிஹான வீட்டிற்கு முன்னைய பாதுகாப்பை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பல தடவைகள் கோட்டாபய இலங்கைக்கு வருவதற்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன, ஆனால் பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டன.
0 Comments