இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 23வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி - 2022 இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று (16) முதல் 25 ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக இலங்கை புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

0 Comments