Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியலமைப்பை மாற்ற ஜனாதிபதி கங்கணம்

ஹிந்த சிந்தனை என்பது தேர்தலுடன் மறந்துபோகும் ஓர் அரசியல் உறுதிச்சீட்டு அல்ல என்று தெரிவித்துள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, சகலரதும் ஒத்துழைப்புடன் நான் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவேன் என்றும் சூளுரைத்துள்ளார்.

 ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமான 'மஹிந்த சிந்தனையில் உலகை வெல்லும் வழி' எனும் தொனிப்பொருளில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
  
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வெளியிட்டு வைபவத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் ஆற்றியை உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


# எனது தாய்நாட்டின்  எதிர்காலம் பற்றி திட்டமிடும் இவ்வேளையில் 2005இல் மஹிந்த சிந்தனையை வெளியிட்டதை நான் நினைத்துப்பார்க்கின்றேன்.


# 2005இல் நான் சகல பிரஜைகளுக்கும் சமாதானம் கொண்டுவருவதாக கூறினேன். நான் நான்கு வருடங்களில் அதனை செய்தேன்.


# 2010இல் நாம் மீண்டும் அபிவிருத்தியை தருவதாக கூறினேன். மீண்டும் நாம் தந்தோம்.


# மஹிந்த சிந்தனை என்பது தேர்தலுடன் மறந்துபோகும் ஓர் அரசியல் உறுதிச்சீட்டு அல்ல.


# இன்று நாம் ஆயிரக்கணக்கான நெல்வயல்களில் பயிர் செய்கின்றோம்.


# நாம் 99 சதவீதமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியிருக்கின்றோம்.


# எவரும் மின்சாரம், குடிநீர்,வீதி உட்கட்டமைப்பு தருவதாக கூறி அரசியல் செய்யமுடியாத அளவுக்கு நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம்.


# இந்த நாட்டின் பிள்ளைகளை அவர்கள் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு எங்கிருப்பவர்களாயினும் அகதி முகாம்களில் வாழ நான் விடமாட்டேன்.


# இன்று அரசதுறையில் 1.4 மில்லியன் பேர் உள்ளனர். அரசதுறைகளை தனியார் மயப்படுத்தும் சகாப்தத்துக்கு நாம் மீண்டும் போக முடியுமா?


# இந்த நாட்டை கூறுபோடுவதற்கு சதிபுரியும் சக்திகளும் இங்குள்ளன.


# நாம் பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தியதாலேயே மக்கள் நல்லாட்சி பற்றி பேசுகின்றனர்.


# என்னிடம் பல ஒப்பந்தங்கள் இல்லை, இருக்கின்றது ஒன்றேயொன்று, அது மஹிந்த சிந்தனை மட்டுமே.


# நான் மதுபானசாலைக்கான அல்லது சூதாட்ட நிலையத்துக்கான அனுமதிப்பத்திரம் ஒன்றைக்கூட வழங்கவில்லை. ஆனால், இன்று பொய், உண்மையைப்போல பரப்பப்படுகின்றது.


# 2005இலும், நான் ஓர் அரசியல் குடும்பத்திலிருந்து வந்தேன். நாம் இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளோம்.


# 3ஆவது பதவிக்காலத்தில் எமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.


# சகலரதும் ஒத்துழைப்புடன் நான் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவேன்.


# இந்த மஹிந்த சிந்தனை பகுதி -3, எமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்துக்கு தயாராக்கவும் உயர்த்தவும் இலக்கு வைத்துள்ளது.


# நீங்கள் எனக்கு 2005இலும் 2010இலும் அளித்த அதிகாரத்துக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.


# நிலைதடுமாறும் காலத்துக்கு மீண்டும் போவதா அல்லது பலம் மற்றும் உறுதி நிலையுடன் முன்னேறுவதா என்பது தொடர்பில் இத்தேர்தலின் மூலம் தீர்மானியுங்கள்.


# ஒளிமயமான எதிர்காலம் கிடைத்த வாழ்த்துகின்றேன் என்றும் அவர், தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஹிந்த சிந்தனை என்பது தேர்தலுடன் மறந்துபோகும் ஓர் அரசியல் உறுதிச்சீட்டு அல்ல என்று தெரிவித்துள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, சகலரதும் ஒத்துழைப்புடன் நான் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவேன் என்றும் சூளுரைத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமான 'மஹிந்த சிந்தனையில் உலகை வெல்லும் வழி' எனும் தொனிப்பொருளில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வெளியிட்டு வைபவத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் ஆற்றியை உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

# எனது தாய்நாட்டின்  எதிர்காலம் பற்றி திட்டமிடும் இவ்வேளையில் 2005இல் மஹிந்த சிந்தனையை வெளியிட்டதை நான் நினைத்துப்பார்க்கின்றேன்.

# 2005இல் நான் சகல பிரஜைகளுக்கும் சமாதானம் கொண்டுவருவதாக கூறினேன். நான் நான்கு வருடங்களில் அதனை செய்தேன்.

# 2010இல் நாம் மீண்டும் அபிவிருத்தியை தருவதாக கூறினேன். மீண்டும் நாம் தந்தோம்.

# மஹிந்த சிந்தனை என்பது தேர்தலுடன் மறந்துபோகும் ஓர் அரசியல் உறுதிச்சீட்டு அல்ல.

# இன்று நாம் ஆயிரக்கணக்கான நெல்வயல்களில் பயிர் செய்கின்றோம்.

# நாம் 99 சதவீதமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியிருக்கின்றோம்.

# எவரும் மின்சாரம், குடிநீர்,வீதி உட்கட்டமைப்பு தருவதாக கூறி அரசியல் செய்யமுடியாத அளவுக்கு நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம்.

# இந்த நாட்டின் பிள்ளைகளை அவர்கள் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு எங்கிருப்பவர்களாயினும் அகதி முகாம்களில் வாழ நான் விடமாட்டேன்.

# இன்று அரசதுறையில் 1.4 மில்லியன் பேர் உள்ளனர். அரசதுறைகளை தனியார் மயப்படுத்தும் சகாப்தத்துக்கு நாம் மீண்டும் போக முடியுமா?

# இந்த நாட்டை கூறுபோடுவதற்கு சதிபுரியும் சக்திகளும் இங்குள்ளன.

# நாம் பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தியதாலேயே மக்கள் நல்லாட்சி பற்றி பேசுகின்றனர்.

# என்னிடம் பல ஒப்பந்தங்கள் இல்லை, இருக்கின்றது ஒன்றேயொன்று, அது மஹிந்த சிந்தனை மட்டுமே.

# நான் மதுபானசாலைக்கான அல்லது சூதாட்ட நிலையத்துக்கான அனுமதிப்பத்திரம் ஒன்றைக்கூட வழங்கவில்லை. ஆனால், இன்று பொய், உண்மையைப்போல பரப்பப்படுகின்றது.

# 2005இலும், நான் ஓர் அரசியல் குடும்பத்திலிருந்து வந்தேன். நாம் இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளோம்.

# 3ஆவது பதவிக்காலத்தில் எமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்.

# சகலரதும் ஒத்துழைப்புடன் நான் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவேன்.

# இந்த மஹிந்த சிந்தனை பகுதி -3, எமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்துக்கு தயாராக்கவும் உயர்த்தவும் இலக்கு வைத்துள்ளது.

# நீங்கள் எனக்கு 2005இலும் 2010இலும் அளித்த அதிகாரத்துக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.

# நிலைதடுமாறும் காலத்துக்கு மீண்டும் போவதா அல்லது பலம் மற்றும் உறுதி நிலையுடன் முன்னேறுவதா என்பது தொடர்பில் இத்தேர்தலின் மூலம் தீர்மானியுங்கள்.

# ஒளிமயமான எதிர்காலம் கிடைத்த வாழ்த்துகின்றேன் என்றும் அவர், தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
- See more at: http://www.tamilmirror.lk/136319#sthash.tX1eB7DL.dpuf

Post a Comment

0 Comments